Advertisement

மேலுார் சின்னையன் கோயிலில் மழை வேண்டி பொங்கல் வழிபாடு

மேலுார்: மேலுார் அருகே பெரியசூரக்குண்டில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் 20 நாட்களாக விரதம் இருந்தனர். நேற்று (ஜூலை., 11ல்) நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாத்திக்கண்மாயில் இருந்து பொங்கல் பானையில் தீர்த்தம் எடுத்து இரண்டு கி.மீ., துாரத்திலுள்ள சின்னையன் கோயிலுக்கு சென்றனர். அங்கு 200 க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய் கள் பலியிடப்பட்டன. பெண்கள் பொங்கல் வைத்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement