Advertisement

வீரபாண்டி முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி 18ல் எருதாட்டம்

வீரபாண்டி: முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி, எருதாட்ட விழா, நாளை, (ஜூலை., 12ல்) வடம்படைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கவுள்ளது. ஆடித்திருவிழாவையொட்டி, சேலம், நெய்க்காரப்பட்டி, மூங்கில்குத்து முனியப்பன் கோவிலில், சுவாமி சிலைகளை சுத்தம் செய்து, கோவில் முழுவதும் மராமத்து பணி நடந்துவருகிறது. நாளை (ஜூலை., 12ல்) இரவு, சுற்று வட்டாரத்திலுள்ள கோர்வை குழுவினர், முனியப்பன் கோவிலில், காளைகளை கட்டி அழைத்து வரும் வடக்கயிறுகளை படைத்து, பூஜை செய்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று, காளைகளை பிடித்து வர புறப்படுவர். பொங்கல் வைபவம், எருதாட்ட விழா, வரும், 18ல் நடக்கிறது. அதற்காக, நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவில் மைதானத்தில், தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement