Advertisement

திருப்பரங்குன்றம் கோயிலில் முப்பழ பூஜை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா நிறைவாக நேற்று சுவாமிகளுக்கு முப்பழ பூஜை நடந்தது.

ஜூலை 7ல் துவங்கிய இவ்விழாவில் தினமும் சுவாமி, தெய்வானை கோயில் ஆஸ்தான மண்டபத்தை வலம் சென்று, திருவாட்சி மண்டப ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு ஊஞ்சலாட்டம் நடந்தது. உச்ச நிகழ்ச்சியாக நேற்று உச்சிகால பூஜையில் மூலவர்கள் சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், உற்ஸவர் சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மா, பலா, வாழை படைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து யானை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.

Advertisement
 
Advertisement