Advertisement

மாம்பழ நிறப் பட்டாடையில் அத்திவரதர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (ஜூலை 17) மாம்பழ நிறப்பட்டாடையில் காட்சியளிக்கிறார் அத்திவரதர். 17 ம் நாள் வைபவத்தில் பக்தர்கள் அதிகாலை முதல் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

அர்ச்சகர்கள் புறக்கணிப்பு: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 17 ம் நாள் வைபவத்தில் இன்று, அத்திவரதர் மாம்பழ நிறப்பட்டாடையில் காட்சியளித்தார். இந்நிலையில், கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கோவில் அர்ச்சகர்களை, உள்ளே விட அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த அனைத்து அர்ச்சகர்களும், அத்திவரதர் தரிசனத்தை புறக்கணித்தனர். மேலும், அனுமதி மறுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement
 
Advertisement