Advertisement

நவநீத கிருஷ்ணர் கோயிலில் மண்டல பூஜை

தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அழகன்குளம் ராதா ருக்மணி நவநீத கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 6 ல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தினமும் மாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணருக்கு நேற்று மண்டல பூஜை விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.பின்பு யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவருக்கு ஊற்றப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது.அதைத் தொடர்ந்து மூலவருக்கு பால், சந்தனம், குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நவநீத கிருஷ்ணர் அருள் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement