Advertisement

தும்பைப்பட்டி கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு வழிபாடு

மதுரை: தும்பைப்பட்டி, சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் இன்று ஆடித்தபசு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு, மற்றும் அன்னதானம் சங்கர நாராயணர் கோவிலில் நடைபெற்றது.

மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி.மூர்த்தி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார். சிறப்பு நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோமதி அம்மன், சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமிகளுக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி பக்தர்களுக்கு சங்கர நாராயணர் திருக் கோலத்தில் விபூதி, சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். 3000-க்கும் மேற்பட்ட் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர், தண்டபாணி குருக்கள், பிரசன்னா அய்யா, சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement