Advertisement

காஞ்சிபுரம் கோவில்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு,பொதுவிருந்து

காஞ்சிபுரம்:மாவட்டத்தில், அறநிலையத் துறை முக்கிய கோவில்களில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, வடை பாயாசத்துடன், பொது விருந்து, நாளை (ஆக., 15ல்) நடைபெறுகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அறநிலையத் துறை முக்கிய கோவில்களில், பொது விருந்து நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நாளை (ஆக., 15ல்), காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், குமரகோட்டம் முருகன், வழக்க றுத்தீஸ்வரர், கோவிந்தவாடி அகரம் ஆகிய கோவில்களிலும் செங்கல்பட்டு சக்திவிநாயர், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்போரூர் கந்தசுவாமி, இளையனார் வேலுார் பாலசுப்பிரமணி, கோவூர் சுந்தரேஸ்வரர் ஆகிய கோவில்களிலும், நாளை (ஆக., 15ல்) மதியம், 12:00 மணிக்கு, வடை பாயாசத்துடன், பொது விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Advertisement
 
Advertisement