Advertisement

முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் ரத்னாங்கி சேவை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 48ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி ஹயக்ரீவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் 48வது பிரம்மோற்சவ விழா 3ம் தேதி துவங்கியது. பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலையில், திருமஞ்சனம், ஹோமம், சேவை சாற்றுமுறையும், இரவில், சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, இன்று நரசிம்மா ஹோமம் நடைபெற்றது. ரத்னாங்கி சேவையில் லட்சுமி ஹயக்ரீவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement