Advertisement

இன்று பாரதியார் நினைவுநாள்

* நம்பிக்கை இருக்குமிடத்தில் தான் வெற்றி உண்டாகும். அது கேட்டதைத் தரும் காமதேனுவாக விளங்குகிறது. விடாமுயற்சியின் இன்னொரு பெயரும் நம்பிக்கையே.

* அமைதி, சாந்தம், பக்தி, உறுதி, அருள் போன்ற நல்ல எண்ணங்களை மனதில் நிரப்புங்கள். எதிர்மறை சிந்தனைக்கு இடம் கொடுக்காதீர்கள்.

* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பர். குறிப்பிட்ட காலம் வேண்டுமானால் மறைக்க முடியும். ஆனால், உண்மை ஒன்றே என்றும் நிலைக்கும்.

* காலம் பணவிலை உடையது என்னும் ஆங்கில பழமொழி ஒன்றுண்டு. பொழுதை வீணாகக் கழித்தால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போக வாய்ப்புண்டாகும்.

* பேச்சும், செயலும் ஒரேவிதமாக இருக்கும் நல்லவர்களிடம் மட்டும் நட்பு வையுங்கள்.

* ஒரு புதிய முயற்சியில் ஈடுபடும் போது, உங்களை நீங்கள் நம்பினால் தான், வெளியே உள்ளவர்கள் உதவுவர்.

* பயம், சந்தேகம், கோபம் போன்ற குணங்கள் வெற்றியைத் தடுத்து நிறுத்துகின்றன. இவைகள் உங்களது பகைவர்கள்.

* பேச்சின் மூலம் ஒருவரை திருப்திபடுத்தி பயனில்லை. வாக்களித்தபடி அதை செயலில் நிறைவேற்றினால் தான் பெருமை கிடைக்கும்.
- சொல்கிறார் தேசியகவி

Advertisement
 
Advertisement