Advertisement

சித்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா

போத்தனுார்:சுந்தராபுரம், காமராஜ் நகரில் உள்ள சக்தி, சித்தி விநாயகர், ஜெயமாரியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா ஓராண்டு நிறைவு முன்னிட்டு, முதலாம் ஆண்டு பெருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று காலை முதல் மதியம் வரை, திருவிளக்கு, புனித நீர் ஊற்றுதல், ஐங்கரன் பெருமான் மற்றும் அம்மை வேள்வி வழிபாடு, பெருந்திரு மஞ்சனம், முதலாம் ஆண்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா, சிறப்பு அலங்கார வழிபாடு, மலர் வழிபாடு நடந்தன.தொடர்ந்து அன்னதானமும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தன. இன்று மாலை சிறப்பு அலங்கார வழிபாடு மற்றும் வான வேடிக்கையுடன் விழா நிறைவடைகிறது.

Advertisement
 
Advertisement