Advertisement

பஞ்சவடீ கோவிலில் பவித்ரோத்சவம்

புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில்திருப்பவித்ரோத்சவம் நடந்தது.திண்டிவனம்- புதுச்சேரி மெயின் ரோட்டில் 36 அடி உயர ஆஞ்ஜநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருப்பவித்ரோத்சவம் நடைபெறும்.

இந்தாண்டு நேற்று முன்தினம் துவங்கி வரும் 20 ம் தேதி வரை நடக்கிறது.நேற்றுகாலை 7:00 மணிக்கு நித்ய ஹோமம், ப்ரதான ஹோமம், மஹாசாந்தி ஹோமம் பூர்ணாஹீதி, திருவாராதனம் சாற்றுமுறை நடந்தது. இன்று 19ம் தேதி புண்யாஹவாசனம், நித்ய ஹோமம், மஹாசாந்தி ஹோமம், பூர்ணஹீதி, சாற்றுமுறையும், வரும் 20ம் தேதி காலை 8:00 மணிக்கு ப்ரதான ஹோமம், பூர்ணாஹீதி, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி, யாத்ரா தானம், கடம் ஆலய வலம் வந்து பவித்ரா மாலைகள் கலைதல், விஷேச திருவாராதனம், ஆழ்வார், ஆச்சாரியார்கள் மரியாதை, சாற்றுமுறை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement