Load Image
Advertisement

அகிலத்திரட்டு அம்மானை பகுதி-9

நாடறிய எம்பெருமாள் நல்லதிரு வாசமிட்டு
லாட மதிலிருந்து வாவுவா ரீசரொடு
வாரமில்லை நமக்கு வஞ்சகங்க ளில்லாமல்
சார முடனே தரணிதனி லோதிவைத்தோம்
அகப்பே ரெனவே அவனிசொல்வ தில்லையினி
உகப்பாரந் தீர்க்க உரைப்பீர்கா ணீசுரரே
லட்சுமியை முன்னம் இருத்தினோஞ்செந் தூர்க்கடலில்
பச்சணியுங் காளிதனைப் பாரச் சிறையில்வைத்தோம்
என்மகவாய்ப் பெறவே இராச்சியத்தி லோர்சடலம்
தன்மகவா யங்கே தான்பிறந்து நல்லவயசு
இருபத்து நாலு என்றாச்சே மாநிலத்தில்
கருவுற்ற முத்தோசம் கழிவதும் நாளின்றாச்சே
விட்டதிரு வாசகந்தான் மேதினியோர் கொள்ளாமல்
கட்டங் கொடிதாய்க் காணுதே தொல்புவியில்
புத்திவரு மென்றிருந்தோம் பிழையாத நீசனுக்கு
சற்று மனதில் தங்குமோ நல்வசனம்
பார்த்திருந்தால் போராது பார்மீதில் மக்களுந்தான்
காத்திருந்து வாடுகிறார் கௌவையுற்று நல்மனுக்கள்
மனுவிடுக்கந் தீர்த்து வாய்த்தசொல் லொன்றதுக்குள்
தோணியேவை குண்டர் சுத்தயுக மாளுதற்கு20 நாளுண்டோ போவதற்கு நல்வேதச் சொல்லுமுண்டோ
கோளுண்டோ வெற்றியுண்டோ கூறும்நீர் வேதவுரை
அப்போது ஈசர் அகமகிழ்ந்து கொண்டாடி
முப்போது வுள்ள முறைகேட்க வேணுமென்றால்
ஆதி வியாகரரை அழைப்பித்துக் கேளுமென்றார்
சோதி யுரைக்க திருமா லகமகிழ்ந்து
அழைத்தார் வியாகரரை அதுகேட்டு மாமுனியும்
பிழைத்தார்கள் போலே
பொடுபொடென ஓடிவந்து
தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண் ணப்பமென்றார்
கண்டிருந்(த) அய்யா கரியமுனி யைப்பார்த்து
முன்பிறந்த துமகிலம் முடிந்ததுவுஞ் கொல்லிமிகப்
பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார்
அப்போ வியாசர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார் வேதவியாசர் முன்னாகமம் கூறல் குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன்
தன்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
நன்மையுட னாடுவதும் நாட்டினார்
குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து
தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும்40 சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும்
நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார்
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர்
உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும்
முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே
தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும்
துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும்
ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும்
நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார் உரைத்திட வியாசர் தானும் உண்மையாய் மொழிந்த தெல்லாம்
கரைத்திடாக் கயிலை மீது கல்லிலே எழுதி வையும்
நரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழி தோறு முற்ற
உரைத்திட முனிக்கு மேலும் உதவிகள் செய்ய வென்றார்
என்று சொல்லிவேத வியாசர் இசைந்ததெல்லாம்
கண்டுகயி லயங்கிரியில் கறைக்கண்டர் நாட்டிவைத்தார்
மாமுனியை யுமனுப்பி மாயத் திருமாலும்
தாமுனிந் தீசுரரைத் தழுவியுறத் தானணைத்துக்
கேதாரம் விட்டுக் கிரிகோவில் வந்திருந்து60 கோதார மாயன் கூறுவார் சங்கமதில்
செந்தூர்க் கடலில் சென்றுபள்ளி கொண்டிருந்து
விந்து வழிசெய்து வித்தகனை ஈன்றெடுத்துத்
தேசபர சோதனைக்கு தெச்சணத் திலேயனுப்பி
வாசமுட னிங்கே வருவோ மெனவுரைத்தார்
அப்போதீ சுவரியும் ஆனசங்கத் தோரர்களெல்லாம்
இப்போது நாங்கள் ஏகுவோ மும்மோடே
என்றுரைக்கச் சங்கம் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுமறி யாகாதே உற்றவுப தேசமதைத்
தேவன் திருமுதலாய்த் தெய்வகன்னி மார்முதலாய்
மூவர் முதலாய் உள்ளறியா விஞ்சையது
நடந்தா லறிவார் நடக்குமுன் னேயொருவர்
அடக்க மறியாத அருவிஞ்சை யீதல்லவோ
அந்தவகை யானதினால் எல்லோரு மென்கூட
வந்தால் சரியல்லவே வரவேண்டாமென்றால் நோவீர்களே
என்றுரைக்க நாதன் எல்லோரு மேதுரைப்பார்
ஒன்றுமறி யாதிடினும் உம்முடனே வாறொமென்றார்
உடனே திருமால் உற்றலட்சு மிநினைவால்
நடைமேல் நடையெனவே நல்லசெந்தூர் தானோக்கி
உன்னி சிவமும் உற்றசத்தி நல்மாதும்80 வன்னத் தேவர்முதலாய் மாமுனிவர் கின்னரரும்
சங்கமு மெங்குளோரும் சகலகலை வாணர்களும்
மங்களக் காரர்களும் மாதுசத்தி யைச்சூழ்ந்து
திரைதிரையாய்க் கன்னியர்கள் சேவித்து ஏத்திவர
ஏழு வாச்சியமும் இமலோக ரேற்றிவர
தொழுவார் சிலபேர் தொம்தொ மெனஆடி
கடலிலோர் பிள்ளை கரியமா லீன்றெடுத்து
நடமாடுந் தெச்சணத்தில் நகர்சோதனைக் கனுப்பி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள
வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி
பேறானோர் காண்பார் பெரியதர் மப்புவியை
என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந் தூதிவர
கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங் கிரிகடந்தார்
கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று
நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு
கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன்
தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார்
நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க100 கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்
வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும்
களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின்
அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன்
கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி
ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும்
வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல்
என்னவித மாமோ என்று மனம்பதறி
மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி
வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று
எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன்
காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது
பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று
என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி
கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி
மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச்
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச்
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடி
வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில்120 பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம்
நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு
தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு
பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு
ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு
பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு
மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு
கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு
உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு
பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு
குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு
சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு
பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா
மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம்
போத வருங்காண் பொற்சவடி யாபரணம்
வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான்
கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான்
காவடி கோடி காணிக்கை முக்கோடி
பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி
இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள்140 எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான்
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல்
நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார்
நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான்
பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும்
என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார்
பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே
வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும்
இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு
என்று இருபேரும் இயம்பி மனதடக்கி
நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி
அந்த முடனே எல்லோருந் தானடந்து
செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும்
மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும்
குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும்
கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே
வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச்
சந்தன வாரி யோரம் தன்னிலே நின்று ரண்டு
சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு160
எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார் கலைமுனி ஞானமுனி வரவு ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து
கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர்
பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா
என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே
மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே
ஏதுகாண் மாமுனியே இங்குநின்ற வாறேது
தாது கரமணிந்த சன்னாசி சொல்லுமென்றார்
அப்போது மாமுனிவர் அவரேது சொல்லலுற்றார்
முப்போது நாங்கள் மும்முதற்சொல் மாறாமல்
மேலோகம் விட்டு மேகவண்ணா வுன்செயலால்
பூலோக மீதிறங்கிப் பொங்குகடல் கண்டணுகிச்
சோதி யுரைத்த சொல்லுரைத்து வாரியிடம்
நீதியாய் நில்லுமென்று நினைவாகச் சட்டமிட்டுக்
கயிலை யதேக கண்ணோக்கும் வேளையிலே
அகில மதிற்கலியன் அனைமிகக் கண்டேதான்
மேலோக மேற மேல்வழிகள் காணாமல்
பூலோக மானதிலே போயிருந்தோங் கண்கவிழ்ந்து
அப்போது ஆயனேநீர் அங்குவந்து எங்களிடம்180 இப்போது போய்நீங்கள் என்னுடைய செந்தூரில்
வாரிக் கரையதிலே வாய்த்ததவ மாயிருந்து
சூரியப் பிரகாச சுத்தவை குண்டராசர்
இக்கட லில்பிறந்து எங்கள் தமைக்கூட்டிப்
பக்கமதில் வைத்துப் பதவிதர வேணுமென்று
நில்லுங்கோ தவசு நினைவாக வென்றுசொல்லி
பல்லுயி ரும்வளர்த்த பாக்கியவா னேநீரும்
உரைத்தமொழி அய்யாவுன் உள்ள மறியாதோ
கறைக்கண்டர் மைத்துனரே கண்ணா எனத்தொழுதார்
அப்போது அய்யா நாரா யணர்மகிழ்ந்து
செப்போடு வொத்தாற்போல் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுகாண் பிள்ளாய் நாடுந் தவம்புரிந்தீர்
வல்லவர்தாம் நீங்கள் வாருங்கோ வென்றழைத்து
அருகிலே நில்லுமென்று அகமழிந் தாரன்போரே
குருவான ஈசரொடு கூறுவார் பின்னாலே
நம்முடைய ஈசுரரே நாம்வந்த காரியங்கள்
எம்முதலே யின்னதென்று இயம்புவீ ரீசுரரே
கட்டான ஈசுரரும் காரியத்தைப் பாருமென்று
மட்டான வாரிக் கரையிலே வந்திருந்து
எல்லோருஞ் செந்தூர் இடமெல்லாங் கண்பார்த்து200
வல்லோர்க ளெல்லாம் வந்திருந்தார் செந்தூரில் சம்பூர்ணத் தேவனுக்கு நற்பேறு அருளல் அங்கு சிலநாள் அமர்ந்திருக்கும் வேளைதனில்
சங்குவண்ணர் நேமித்த சடல மதின்பெருமை
உரைக்கிறார் அன்பர் உள்ள மகிழ்வதற்கு
தரையீரேழு மளந்த சுவாமி யுரைக்கலுற்றார்
சீரான நல்ல தெட்சணா புமியிலே
பாரான நல்ல பதிதா மரையூரில்
தவசிக் குகந்த தாமரையூர் நற்பதியில்
சிவசிவா வளரும் தெட்சணா புரிநாடு
பாண்டவரில் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு
ஆண்டபர மேசுரரை அகம்வைத்துப் போர்விசையன்
நின்று தவமுடித்து நெடியரனை மாதுவையும்
கண்டு பதம்வாங்கிக் கைகண்ட திவ்வூரு
அதியரசன் முன்னாள் அதிகத் தவமிருந்து
பதியரசி யானப் பார்வதியை ஈன்றதுதான்
இவ்வூரு தெச்சணந்தான் ஏற்றதா மரையூரு
செவ்வூரு நல்ல சிறந்தமண வைப்பதிதான்
வானலோ கம்வாழும் வாய்த்ததெய் வேந்திரனும்
தானவரைக் காணத் தவசிருந்த திவ்வூரு
பஞ்சவர்க்கு முன்னம் பசுவா னுதவிசெய்ய220 அஞ்சல்செய்து நாதன் அமர்ந்திருந்த திவ்வூரு
சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்த திவ்வூரு
தாம்பிரவர்ணி யாவி தழைத்திருந்த திவ்வூரு
பரராச முனிவன் பாரத் தவசுபண்ணி
விரமான வியாகரரை மிகஈன்ற திவ்வூரு
தவம்புரிய வென்று தானினைத்த பேர்களெல்லாம்
பவமற்ற தாமரையூர் பதியாகு மென்றுரைப்பார்
தவசுக் குகந்த சந்தமுற்ற பேரூரு
பவிசுக் குகந்த பாலதியத் தாமரையூர்
அவ்வூரு தன்னில் ஆதி யருளாலே
செவ்வுமகா விஷ்ணுவும் செய்தசட மேபிறந்து
பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ்காட்டி
மறந்திடா முன்னமைந்த மாதை யுறவாடிப்
பூலோக மனுக்கள் பிள்ளைபோ லேவளர்ந்து
மாலேற்கப் பூசை மனையில் மறவாமல்
விட்டிணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டுக்
கட்டுத்தீர்க் காகக் கண்வளர்ந் தார்கலியில்
ஒருவர்க்கோர் பொல்லாங்கு உலகில்மிகச் செய்யாமல்
குருவைக் குருகண்டு கொக்கரித் தேவளர்ந்தார்
எதிர்த் தோரையடக்கி எல்லோர்க்கும் நல்லவராய்240 உருத்துக் கரியவராய் உலகில் மிகவளர்ந்தார்
எச்சா தியார்க்கும் இவர்நல்ல வரெனவே
அச்சாதி யெல்லாம் அகமகிழத் தான்வளர்ந்தார்
முன்னுதித் துடன்பிறந்தோர் ஒருவர்மூப் பாடாமல்
பின்னுதித்தும் பெரியோராய்ப் பெருமையுட னேவளர்ந்தார்
தாய்தகப் பன்மாமன் சந்தமிந்தத் தம்பியென்றும்
ஞாயவா னென்றும் நாடி மிகவளர்த்தார்
ஊருக்குந் தலைவன் உடையவழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவனென்று அன்னை பிதாவளர்த்தார்
ஞாய மிருப்பதனால் நாடாள்வா னென்றுசொல்லித்
தாய்தமர்க ளெல்லாம் தாங்கி மிகவளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத் திலும்பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும்பேர் கேட்கவைப்பான் இவன்கீர்த்தி நல்வளமை
பல்லார்க்கும் ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன்சமைவா னென்றுசொல்லி
எவ்வோருங் கொண்டாட இன்பமுட னேவளர்ந்தார்
அவ்வோருங் கொண்டாட அவர்வளரும் நாளையிலே
பத்து வயது பண்போ டிருபதிலே260 மற்று நிகரொவ்வா மன்னவர்போ லேவளர்ந்தார்
எல்லாத் தொழிலும் இதமிதமாய்க் கற்றுமிகப்
பொல்லா தாரோடு பெரும்பகைபோ லெசீறி
நல்லாரை யுள்ளில் நாளு மறவாமல்
கல்லாரை யெல்லாம் கண்டுகழித் தேயிருந்தார்
ஈவதற்குத் தர்மனென எளியோரைக் கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிகவளர்ந்தார்
பதினே ழுவயதில் பண்டமைத்த பெண்ணோடு
விதியா னபடியால் மெல்லியர்மே லிச்சைகொண்டு
கூடிக் குணமாய்க் கொண்டவனை யுமகற்றித்
தேடி யிவரோடு செய்யரச மாயிருந்தாள்
வானுபர மேசுரனார் மாயவனா ராணையிட்டு
நானும்நீ யுமாக நலமாக வாழ்வோமென்று
ஆணையிட் டிருபேரும் அகமகிழ்ந் தன்றுமுதல்
நாண மில்லாமல் நாயகன்போ லெவாழ்ந்தார்
மங்கை காணாமல் மறுவூரு தங்கறியாள்
அங்கவளைக் காணாமல் அயலூரு தங்கறியார்
இந்தப் படியாய் இவர்வாழும் நாளையிலே
எந்தநருளுங்கண்டு இவர்க்கிவளை யமைத்ததென்பார்
முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே280 சொன்னா ரெவரும் சுவாமி யருளாலே
அன்றைக் கமைத்ததுவே அவளையிவர்க் கல்லாது
என்று நருளெல்லாம் இயம்பி மிகவுரைத்தார்
மன்றீ ரேழுமறிய மங்கையொடு வாழ்கையிலே
உற்ற வயசு ஓரிருபான் ரண்டதிலே
சத்துராதி யோர்நீசன் தானே பிழையேற்க
ஏற்கவே நீசன் இடறுசெய்த ஏதுவினால்
ஆர்க்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே
எல்லோரு மறிய இவரிருந்தா ரம்மானை
வெல்லாரு மில்லா விசையடக்கித் தானிருந்தார்
நொம்பலங்க ளென்று நொந்து மிகவுழைந்து
தம்பிலங்க ளடக்கித் தருணம் புலம்பலுற்றார்
கருவுற்ற தோசம் கழிந்து சிவஞானத்
திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே
மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத்
தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார்
அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம்
முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு
எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே
மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே300 சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு
உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும்
மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி
அகம்வைத்த எண்ணம் அறிந்துசிவ நாரணரும்
வந்துசொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று
விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்கச்
சொல்லுகிறா ளந்தச் சொற்பனத்தை யன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவா ளன்போரே
ஆயிரத் தெட்டு ஆண்டிதுவா மிவ்வருசம்
மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது
இம்மாத மித்தேதி ஏற்றதிருச் செந்தூரில்
நம்மாணை கொடியேறி நல்லதிரு நாள்நடக்கு
அங்குன் மகனை அழைத்துவ ருவாயானால்
எங்குள்ளோ ருமறிய இப்பிணி யுந்தீர்த்து
நல்லபே றுங்கொடுப்போம் நம்மாணை தப்பாதெனச்
சொல்லவே கண்டேன் சுவாமிகரு மேனிநிறம்
நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப் போகாது
தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து
இந்தக் கனாவதற்கு இங்கிருந் தங்கேபோய்
வந்தல்லா தேபிணியும் மாறவகை யில்லையல்லோ320 என்றுரைக்க எல்லோரும் இன்பமுட னேமகிழ்ந்து
நன்றுநன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார்
வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து
ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்துத்
தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்துத்
தீன மானவரைத் திடமாகக் கூட்டிவந்து
ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில்வைத்து
நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம்
மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே
நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிகநிறுத்தி
இருந்த பதியும்விட்டு ஏற்றவொரு காதம்விட்டு
வருந்த நருளோடே வழிகொண்டா ரன்போரே
கூடங் குளமும்விட்டுக் குளிர்ந்தசுக்குப் பாரும்விட்டுத்
தோடவழி யாறுங்கண்டு சூறாவழிக் காடும்விட்டு
நடந்து வொருவனத்தில் நல்லதண்ணீ ராவிகண்டு
கொடர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து
தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே
வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும்
பிறவிக்கு ஏற்ற பிள்ளை வருகுதென்று
திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி340 எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று
அருகே தானின்ற ஆதி முனியான
நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து
வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே
நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம்
நானே மித்த நல்லவுயி ரானதிங்கே
தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே
எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று
பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார்
அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப்
பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும்
எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே
அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார்
வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
கண்டு குவித்துக் கனக முனிமார்கள்
வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும்
முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி
துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப்360 பதியி லிருந்தாற்போல் பார்மன்னனை யிருத்திக்
குதிரைநடை கொண்டாற்போல் கொண்டோடி மாமுனிவர்
கூட நடப்போர் குதித்துக்குதித் தோடிவர
வாடி யிடைந்து மனுநருட்க ளோடிவர
நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி
வல்லசெந் தூர்ப்பதியில் வந்தனர்கா ணன்போரே
வந்த முனிமார்கள் வாழ்த்தியந்த நல்லுயிரைச்
சந்தனா வீதியிலே சடலந்தனை நிறுத்தி
மாமுனிவர் தாமும் மாயோனை வந்துகண்டு
சாமிநீர் கொண்டுவரத் தானுரைத்த நற்சடலம்
அடியா ரெதிரேபோய் அழைத்துவந்தோ மையாவே
திடீரெனவே நாதன் சொன்னமுனி யோடுரைப்பார்
கொண்டுவந்தோ மென்றீரே கூர்மையுள்ள நற்சடலம்
பண்டுமுறை யெல்லாம் பகருவீர் மாமுனியே
அப்போது மாமுனிவர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று செப்பலுற்றா ரன்போரே
நல்ல சடலமிது நாடுமுற் காலமதில்
வெல்லமர்கோன் வாழும் வெற்றிதெய்வ கோலகவுயிர்
பெருசம் பூரணன்தான் பெரிய திறவான்காண்
ஆரொவ்வா ரேயிவர்க்கு ஆதி கிருபையுள்ளோன்380 அப்படியே தெய்ட லோகமதி லேயிருக்க
இப்படியே யிவர்க்கு எமலோக மானதிலே
இருக்கின்ற பெண்ணதிலே இசைந்தபர தேவதையென்(று)
ஒருகுழலி தன்மேல் உள்ளாசை யாயிவரும்
அவளு மிவர்பேரில் ஆசையாய்த் தானிருந்து
இவளு மிவரும் இருந்துமிக வாழ்கையிலே
தேவருக்குந் தெய்வ லோகமே ழுள்ளவர்க்கும்
யாவருக்கு மோர்பிறவி யாகுகின்ற நாளதுவாம்
இவரையும் வருத்தி என்னவுன் செய்தியென்றார்
அவளுடைய ஆசையினால் அல்லவென்று தான்மறுத்து
இவளையு மென்னோடு இயல்பாய்ப் பிறவிசெய்தால்
குவளையணி மாயவரே குணமெனக் காகுமென்றார்
அப்போது நாதன் அந்தத்தே வன்றனக்குச்
செப்பமுள்ள புத்தி செப்பிமிகப் பார்த்தனரே
அப்போதிவர் கேளாமல் அதுதானது தானென்றார்
மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி
ஆயனப்போ திவர்க்கு அதிகப் பலனுரைத்தார்
நல்லதுநீ கேட்ட ஞாயமீட் டேற்றமதாய்
வல்லவனை நினைந்து மாதுவும் நீதானும்
எங்க ளிருபேர்க்கும் இன்னம் பிறவியிலே400 மங்கையும் புருசனென மறவாம லாவதற்கு
வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றிப்
பரந்தாண்டி கண்டு பலன்பெறுங்கோ வென்றுசொல்லி
தவசிருக்க விட்டீர்காண் சங்கரரே நீர்கேளும்
சிவசிவா வென்றுதவம் செய்தவர்கள் நிற்கையிலே
தவம்பார்க்க ஈசுரரும் சன்னாசி நீதனுமாய்
அவட மெழுந்தருளி அங்கேகும் வேளையிலே
தெய்வேந் திரனும் திருமுடி யுஞ்சூடி
மையேந்திர னுடைய மலர்பாதங் காணவென்று
அவனுமிக வந்தான் அரனெதிரே அய்யாவே
தவத்துக் கிடறு தான்வருவ தோராமல்
தேவன் மதிமயங்கித் திருமுடிமே லிச்சைகொண்டு
பாவையுட னுரைத்துப் பற்கடித்தான் தேவனுமே
அதையறிந் திசுரருள் அன்றும்மு டனுரைத்தார்
இதையறிந் துநீரும் ஏற்றதேவ னோடுரைத்தீர்
வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால்
ஏற்றகீ ழுலகில் என்மகவு சான்றோரில்
நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து
தொல்லையெல் லாந்தீர்த்துச் சூலினழுக் கறுத்து
வளரும் பருவமதில் வந்துன்னை நானெடுத்து420 இளவரசா யுன்னை ஈன்றெடுத் தேவளர்த்து
ஆளு மரசு அழகாக வுன்றனக்கு
நாளு மிகத்தருவேன் நம்மானை தப்பாதென
உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில்
பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர்
மாதைப் பிறவிசெய்தீர் மக்கள்சான் றோர்குலத்தில்
சூதஎமக் குலத்தில் தோகையரைத் தோன்றவைத்தீர்
அப்படியே முன்னம் அய்யாவே யிவ்வகைக்கு
இப்படியே பிறந்து இச்சடல மென்றுரைத்தார் என்றிந்த விவரமெல்லாம் இயல்முனி வோர்கள் சொல்ல
நன்றிந்த விவர மென்றே நாரணர் தயவு கூர்ந்து
சென்றிந்தச் சடலந் தன்னைச் செந்திலம் பதியி லெங்கும்
கொண்டெந்தத் தெருவுங் காட்டிக் குளிர்ப்பாட்டி வாருமென்றார் மேலுள்ள சடலந் தன்னை மிகுமுனி மாரே நீங்கள்
நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையி லூட்டிப்
பாலுள்ள பதத்தில் கொண்டு பழவிளை தீரக் காட்டி
மாலுள்ளம் புகுத நாட்டி வாருங்கோ சிணமே யென்றார் அப்படி முனிமா ரேகி அங்கங்கே கொண்டு காட்டி
முப்படித் தோசம்போக முனைபத மதிலேமூழ்கி
இப்படி யிவரைக் கொண்டு இவர்வரு முன்னேயாகச்440
செப்படி வித்தை நாதன் செகலினுள் ளகமே சென்றார் வைகுண்டர் உதயம் வானவர் தேவர்போற்ற மறைமுனி வோர்கள் பாடத்
தானவர் ரிஷிகளோடு தமிழ்மறை வாணர் போற்ற
ஞானமாம் வீணை தம்பூர் நாற்றிசை யதிர வோசை
ஓநமோ வென்று தேவர் ஓலமிட் டாடி னாரே மத்தளத் தொனிகள் வீணை மடமடென் றேற்ற வானோர்
தித்திதெய் தித்தி யென்ன தேவியர் பாடி யாடத்
தத்தியாய்ச் சங்க மெல்லாம் சதுர்மறை கூறி நிற்க
முத்திசேர் மாயன் தானும் மூழ்கினர் கடலி னுள்ளே கடலினுள் ளகமே போந்து கனபதி மேடை கண்டு
மடவிபொன் மகரந் தன்னை வாகுடன் பூசித் தேய்த்து
நிடபதி மாயன் தானும் நிறைந்தபொன் னிறம்போல் வன்னி
வடவனல் போலே வீசி வந்தனர் மகர முன்னே வந்தனர் மகர முன்னே மாதுபொன் மகரங் கண்டு
செந்தழ லெரியோ வென்று செல்லிடப் பதறி நொந்து
எந்தனின் மான வானோ எரிவட வாச மேர்வோ
கந்தனின் மாய மாமோ என்றவள் கலங்கி னாளே கலங்கியே மகரந் தானும் கருத்தறிந் தேதோ சொல்லும்
இலங்கியே வருவோ மென்ற என்மன்னர் தானோ யாரோ460
சலங்கியே யதிரப் பூமி சதிரெனக் கதிரு பாய
துலங்கிய சுடரைப் பார்த்துச் சொல்லுவாள் மகரந் தானே சுடரே சுடரே துலங்கு மதிசுடரே
கடலே கடலே கடலுட் கனலாரே
அக்கினிக் கேயபயம் அனலே வுனக்கபயம்
முக்கியமாய்க் காந்தல் முனையே யுனக்கபயம்
தீயே யுனக்கபயம் திரிபுர மேயபயம்
நீசுட்டத் தலங்கள் நினக்குரைக்கக் கூடாது
மாசற்ற ஈசன் வல்லவனோ டுள்ளிருந்து
காண்டா வனமெரித்தாய் கடியவில்லி கையிருந்து
ஆண்டஇலங் கையெரித்தாய்அனுமன்கையி லேயிருந்து
முப்புரத்தைச் சுட்டழித்தாய் முதன்மைகையி லேயிருந்து
ஒப்புரவாய் நீயெரித்த உவமைசொல்லக் கூடாது
அனலே வுனக்கபயம் ஆதி யுனக்கபயம்
கனலே யமருமையா காந்தல்தனை மாற்றுமையா
மன்னரரி நாரணர்க்காய் மாறுவீ ரக்கினியே
இந்நியல்பை யெல்லாம் என்மன்ன ரிங்குவந்தால்
சொல்லி யுனக்குச் சொக்கம்வேண் டித்தருவேன்
வில்லிக்கு வல்லவனே விலகி யமருமையா
என்னையென் மன்னவர்தான் இந்தக் கடலதிலே
பொன்னனைய நன்மகரம் ஆகவே போகவிட்டார்480 வருவோ மென்றநாளும் வந்ததுகா ணக்கினியே
தருவே னுனக்குவரம் தாட்டீகன் வந்ததுண்டால்
அமர்ந்துநீ போனால் அதிகப்பல னுண்டாகும்
சுமந்த பறுவதத்தின் சுகம்பெற்று நீவாழ்வாய்
என்றுமக ரமாது எரியைமிகக் கண்டுளறி
நின்று மயங்குவதை நெடியதிரு மாலறிந்து
அனலைமிக வுள்ளடக்கி ஆதி யுருக்காட்டி
மனைவியேநீ வாவெனவே மாய னருகழைத்தார்
உடனே பொன்மாது உள்ளம் மிகநாணி
தடதடென வந்து சுவாமியடி யில்வீழ்ந்து
எந்தன் பெருமானோ இப்படித்தா னின்றதுவோ
சிந்தை மயக்குதற்கோ தீப்போலே வந்ததுதான்
என்றுமிகப் பொன்மகர இளமாது ஸ்தோத்தரித்து
மன்று தனையளந்தோர் வாநீ யென அழைத்து
அருகில் மிகநிறுத்தி அங்குள்ள தேர்பதியும்
கருதி யிருபேரும் கண்கொண் டுறப்பார்த்து
வச்சிர மேடை மரகதப் பொன்மேடை
எச்சரிக்கை மேடைஎல்லா மிகபார்த்து
மாதே வுனக்கு வளர்பிறவி பத்தெனவும்
சீதே வுனக்குச் சிறந்தபேறு பத்ததிலே500 பலம்பேறு பேறாய் பார்மகிழ வோர்பாலன்
சிலம்பே றுடையவனாய் சிவனுக் குகந்தவனாய்
எகாபர முமகிழ யானும் நீயுமாக
மகாகுரு வதாக மகிழ்ந்து மகிமையுடன்
தன்மச் சிறப்பதிகத் தலைவன் தனைப்பெறவே
உண்மையாய் நானுனக்கு உபதேச மாயுரைத்தேன்
என்றுரைக்க நாரணரும் இளமகர மேதுசொல்லும்
பண்டு அமைத்திருந்தால் பக்கஞ்சொல் வதோ அடியாள்
சித்தத்துக் கேற்ற செயலெனவே பொன்மகரக்
கற்றைக் குழலி கருதி மிகவுரைத்தாள்
உடனே பொன்மகரம் உள்ளம் மயக்கமிட்டுத்
திடமயக்கிச் சிங்கா-சனத்தில் மிகவிருத்தி
மயங்கியே பொன்மகர மாது மிகவிருக்கத்
தியங்குதே லோகமுதல் திரைவாயு சேடன்முதல்
ஈசர்முத லாதிமுதல் ஏற்றதெய் வார்கள்முதல்
சீதை முதல்மயங்க சீமையீரே ழுமயங்க
மாமோகச் சக்கரத்தை மாயவனார் தான்வீசிச்
சீமை யெழுகடலும் சிணமே மயக்கினரே
மயக்கியந்த மால்மகரம் மாமோக மாயிருக்க
தியக்கியந்த நாரணரும் சென்றார் மதுரமதுள்520 மகரமுள் சென்று மகனை மிகநினைக்க
உகரமுனி கூட்டிவந்த உற்ற சடலமது
சிணமே கடலுள் சென்றதுகா ணன்போரே
குணமே குணமெனவே கூண்டரியோன் தான்பார்த்து
மகனை மிகவெடுத்து மகரமதி னுள்ளேகொண்டு
அகரத் தெருவறையில் அலங்காரத் தட்டில்வைத்துக்
காலொன்றாய் நிற்கும் கனத்தபொன் மேடையதுள்
நாலொன்றாய்க் கூடும் நல்லசிங் காசனத்தில்
தங்கவை டூரியத்தால் தானிறைந்த மண்டபத்துள்
எங்கும் பிரகாசம் இலங்குகின்ற மண்டபத்துள்
முத்துக்கள் சங்கு முழங்குகின்ற மண்டபத்துள்
பத்தும் பெரியோர்கள் பாவித்த மண்டபத்துள்
தங்கநீ ராவித் தான்வளரு மண்டபத்துள்
சங்கு முழங்கிநிற்கும் சதுரமணி மண்டபத்துள்
மூவாதி கர்த்தன் உகந்திருக்கு மண்டபத்தில்
தேவாதி தேவர் சிறந்திருக்கு மண்டபத்தில்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மண்டபத்தில்
தாற்பிரிய மான தாமிரவர்ணி மண்டபத்தில்
எண்ணக் கூடாத இயல்புநிறை மண்டபத்தில்
மண்ணளந்தோர் மகரமதுள் மகனை மிக இருத்திக்540 கண்ணான மகற்கு கனத்ததங்கச் சட்டையிட்டு
எண்ணவொண்ணா ஆபரணம் எல்லா மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவும் தலைமேலே தூக்கிவைத்துப்
பங்கமில்லாத் தைலப் பதத்தில் மிகமூழ்கி
வைகுண்ட வெள்ளை மான்பட்டொன் றேயெடுத்துக்
கைகொண்டு பாலனுக்குக் கண்ணர் மிகச்சூடி
மேலுக ளொக்க மினுமினுக்கப் பச்சையிட்டுக்
காலுக ளுக்குத்தங்கக் கழராப் பணிகளிட்டு
மகனை யெடுத்து மடிமீதி லேயிருத்தி
உகமாள வந்தவனோ உடையவனோ என்றுசொல்லிக்
கண்ணைத் தடவி கரிய முகந்தடவி
எண்ணும் வளர்வாயென்று இசைந்தமுகத் தோடணைத்துப்
பாலனைப் போல்காட்டிப் பதினா றுடன்காட்டி
நாலுரண்டு காட்டி நல்ல மகவதுக்கு
நடக்கக் கருமம் நவின்றிடவே நாரணரும்
அடக்க முடனே அருளுவா ரன்போரே
நல்ல வுபதேசம் நன்மகவுக் கேயருளி
வல்லத் திருநாதன் வகுக்கிறா ரன்போரே விஞ்சையருளல் தேடிய மறைநூல் வேதன் தேவியர்க் கமல நாதன்
நாடிய இறையோன் ஞானி நாச்சிமார் தேவ ரோடும்560
கூடிய ரிஷியோர் வானோர் குவலய மறியா விஞ்சை
தேடிய மகனார்க் கென்று செப்பினா ரொப்பில் லானே மகனே வுனது மனமறிய மறையோ ரறியா விஞ்சைசெய்து
அகமே யருளித் தருவதெல்லாம் அனுப்போ லசலில் விலகாதே
உகமே முடிந்த தின்பிறகு உதிக்குந் தர்மயுகத் தில்வந்தால்
செகமே யறியச் சொல்லிமிகச் சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே ஆண்டா யிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே
நான்றாங் கடலின் கரையாண்டி நாரா யணனே பண்டாரம்
கூண்டாந் தெச்ச ணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்று
ஒன்றாம் விஞ்சை யிதுமகனே உரைப்பேன் ரண்டாம் விஞ்சையதே வேண்டாம் வேண்டாங் காணிக்கையும் மிகவே வேண்டாங் கைக்கூலி
ஆண்டார் நாரா யணன்தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும்
வேண்டா மெனவே நிறுத்தல்செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருநீ
இரண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையதே கொற்றவர் தானு மாண்டு குறும்புகள் மிகவே தோன்றி
உற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்து வோடி
மற்றதோ ராண்டு தன்னில் வருவோ மென்றா கமம்போல்
முத்தலத் தோருங் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை நல்ல மகனே நாலாம் விஞ்சைகேளு
வல்ல நடுஞான வாய்த்த வைகுண்டமது580 பிறந்துகொண் டிருக்கெனவும் புதிய ந÷க்ஷத்திரத்தில்
அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லு
மாழுவது மாண்டு மனதுகந்த தேமுழிக்கும்
முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும்
ஒருநெல் லெடுத்து உடைக்கநாடு கேட்டுக்கொள்ளும்
இருநெல் லெடுத்து உடைக்கநாடு தாங்காது
மலைக ளுதிர்ந்துவிடும் வான மழிந்துவிடும்
தலைநாட் சேத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல்
என்றுநா லாம்விஞ்சை இதுதானே என்மகனே
சத்தமொன் றானதிலே தானிதெல்லா மாகுமென்று
சித்த முடனே செப்பியிரு என்மகனே
ஆயிரத் தெட்டு அதில்வாழுந் தேவருக்கு
வாயிதமாய் விஞ்சை வகுப்பேன்கே ளென்மகனே
நாட்டுக் குடைய நாரா யணர்தானும்
ஆட்டுக் கொடைபூசை அனுப்போலும் வேண்டாமென்று
சொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்கத்
தொல்லுலகி லாரேக்கார் பார்ப்போமென்று சொல்லிடுநீ
தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு
வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக்
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம்600 உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும்
இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத்
தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும்
உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே
நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம்
மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்
சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில்
ஓட்டைக் கலத்ததிலும் உக்கு மிரும்பதிலும்
முழியாதே யென்மகனே மும்முதற்கும் நாயகமே
அழிவாகிப் போகும் அன்புகெட்ட நீசருடன்
பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே
மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே
வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத்
தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று
இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி
மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே
மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி620 நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே
பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச்
சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே
ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும்
காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே
சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம்
எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே
வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில்
நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே
கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம்
கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய்
அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்
இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்
பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்
உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரே
தங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்
பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்
என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்து
நன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே640 இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே
உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்
என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்
அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப்
பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே
சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல்
யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே
நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்
செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே
ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமே
ஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே
முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்
என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ
அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க
நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்து
மேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ
இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி
எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார்
பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார் 660 அந்த வுடனே ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக்
கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்
திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே
எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்
தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்
உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்
சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே
மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால்
தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்
அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்
எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே
முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்
நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்
எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே
ஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்து
பாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ680 வத்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல்
சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே
நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல்
கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல்
எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல்
பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல்
காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல்
மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி
நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே
எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய்
மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும்
கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி
கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே
இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய்
அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால்
நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா
உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை
என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே700 நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே
நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே
தானீத னான சர்வபரா என்மகனே
ஒக்க வுனது உள்ளம் நினைத்தபடி
மிக்க நடத்தி விரும்பியிரு என்மகனே
எண்ணிறந்த கோடி இயல்பாவஞ் செய்தோர்க்கும்
நண்ணியே மோட்சம் நவிலவென்றா லுன்மனந்தான்
முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரைத்
தக்கோடி நரகமதில் தள்ளவென்றா லுன்மனந்தான்
உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகனே
எனக்கேற்க நின்றவரை இரட்சிப்பது முன்மனந்தான்
சிவனும்நீ நாதனும்நீ திருமாலும் நீமகனே
தவமும் வேதனும்நீ சங்கமுத லெங்கும்நீயே
அப்படியே அய்யா அரிநாத னுமுரைக்க
முப்பொருளோர் மெய்க்கும் முதலோன் மகிழ்ந்துரைப்பார்
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்தால்
வாறு மேலென்ன வகுப்பீர்கா ணையாவே
அப்போது நாதன் அன்பா யகமகிழ்ந்து
செப்புகிறார் நல்ல திருமகற்கு அன்போரே
அதிகத் தவசு ஆண்டாறு தான்கழித்தால்720 இதின்மேல் நடப்பு இயம்பக்கே ளென்மகனே
இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி
மும்மூவ ருக்கும் முதல்வனாய் வந்தாக்கால்
தானா னாய்நீயும் தலைவனும்நீ என்மகனே
சாணாரின் நாயகமே சாதித்தலை வன்நீயே
எந்தப்படிநீ எண்ணி நினைத்த தெல்லாம்
அந்தப்படி செய்து அவனிதனி லேசிலநாள்
சொந்த விளையாட்டு தொல்புவியிற் கொண்டாடிச்
சிந்தாத நன்மையோடு செகத்திலிரு என்மகனே
அதின் முன்னாக அன்னீத மாபாவி
ஏதுவினை செய்தாலும் எண்ணம்வையா தேமகனே
தாழ்ந்திரு என்மகனே சட்டைக்குள் ளேபதுங்கிச்
சார்ந்திரு என்மகனே தனதில்மிக நினைத்துக்
கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே
பாவத்தைக் காணாதே பாராக்கிரமங் காட்டாதே
ஆக்கிரம மெல்லாம் அடக்கியிரு என்மகனே
தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே
எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்
பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே
வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே740 சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்
ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே
ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே
ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்
நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே
பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை
நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார்
சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே
ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே
எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே
வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே
ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே
ஆழ மனதுடைய அதிகமக னேவுனது
விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம்760 மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே
தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும்
கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு
மகனே வுனது மனறியக் காட்டினதை
அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே
பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது
உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே
தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே
பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே
கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப்
பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ
தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே
நாட்ட மறவாதே நாரணா என்மகனே
அப்போது ஆதியுடன் அம்மகவு ஏதுரைக்கும்
இப்போது என்றனக்கு இத்தனையுஞ் சொன்னீரே
கலியுகத் தைமுடித்துக் கட்டானத் தர்மபதி
வலியுகத்தைக் காண்பதெப்போ மாதா பிதாவேயென்றார்
அப்போது மகனை ஆவிமுகத் தோடணைத்து
இப்போது சொல்லுகிறேன் என்மகனே கேட்டிடுநீ
நீபோய்த் தவசு நீணிலத்தில் செய்திருக்க780 நான்போய் நடத்தும் நல்வளமை கேட்டிருநீ
ஆயிரத் தெட்டு ஆனதிரு மண்டபத்தில்
வாயிதமா யாண்டொன்றில் வைத்தமண்ட பங்களிலே
நூற்றிப் பன்னிரண்டு நொடிப்பே னோராண்டதிலே
தோற்றுவிப்பே னார்க்கும் தூது மிகநடந்து
பத்தாண்டுக் குள்ளே பலசோதனை பார்த்து
வித்தார மேலே விசாரிப்பேன் கண்டாயே
அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவே ரத்தனையும்
எங்கெங் குமொடுக்கி யானுன் னிடமிருந்து
ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து
துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கி
உன்மூப் புயர்மூப்பாய் உல்லாச மேதருவேன்
பின்மூப் பில்லாமல் பெரியோனின் நாமமதாய்
அடக்குடக் கெல்லாம் அன்றுனக்கு நான்தருவேன்
வடக்கு வெளிவாசல் மலைமீதி லோர்புதுமை
உண்டாகு மகனே உனக்கு நற்காலமதே
தண்டா யுதத்தோடே சத்தமொன் றேபிறக்கும்
மேலக்கால் மண்டபமும் மேல்மூடி தான்கழன்று
காலத்தால் காணும் கண்மணியே யுன்காலம்
தெச்சணா மூலை தென்பாற் கடலருகே800 மெச்சும் பதிமூலம் விளக்கெரியக் கண்டுனது
கால மிதுமகனே கன்னிதிரு தென்திசையில்
கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும்
தாபரமாய்த் தன்னால் தலங்க ளதுதுலங்கும்
கண்டதுவே காலம் கனத்தவலு சூரியனும்
பண்டு முறைதப்பிப் பருதிரத்தக் கண்வெறியாய்
மகனே வுனக்காகா மாநீசப் பாவியெல்லாம்
அகமே கனல்தாவி அன்றாடம் தானழிவார்
உகமீதே தர்மம் உனக்கெனக்கென் றேகுதிக்கும்
மகனே வுனது மாதவத்தோர் காலம்நன்று
கால மிதுமகனே கண்மணியே கேட்டிடுநீ
தூல முரையாதே துலங்கும்நா ளாகுமட்டும்
எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம்
மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே
இவ்வகைக ளெல்லாம் என்மகனே யுன்காலம்
அவ்வகைக ளெல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ
இனத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று
மனதில் வேறெனவே வையாதே யென்மகனே820 நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே
தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ
தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே
மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே
அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து
எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே
லிங்கமொன் றேதிக்கும் இணையாக ஓர்சோடாய்
தங்கநவ ரெத்தினங்கள் சமுத்திரத்தி லேகாணும்
ஆனையொரு கன்றீனும் அதினா லுலகமெல்லாம்
தானாக ஆளும் தலைவனும்நீ யல்லாது
மலையடி வாரம் வளருமொரு விருச்சம்
அலையதி லும்பெரிதாய் அதுதழையுங் கண்டாயே
சிலையுள்ளே தோன்றி சிவதோத்தி ரமாக
நிலையொன்றா யாகி நீயாள்வா யுன்காலம்
வாரிக் கரையில் மண்டபமொன் றேவளர்ந்து
நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு
ஒருகுடைக்குள் ளாள்வாய் உன்கால மென்மகனே837

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement