1. ஏழைகளுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் அள்ளிக்கொடுக்கும் ராஜயோக வாழ்க்கை கிட்டும்.
2. புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்.
3. கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிட்டும்.
4. தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிட்டும்.
5. தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.
6. பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிட்டும்.
7. மோர், பானகம், குடிநீர்தானம், செய்தால் முற்பிறவி பாவம் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
8. தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தின் இருந்து தப்பிக்கலாம்.
9. தன் சக்திக்கு ஏற்ற தானம் செய்தால் நரகத்தின் கொடுமைக்கு ஆளாகாமல் நேராக கைலாயம் செல்லலாம்.
10. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.
மேலும் அட்சய திருதியை அன்று மட்டுமின்றி சித்திரை மாதம் முழுவதுமே ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் குடும்பத்தில் உள்ள வறுமை கஷ்டங்கள் போன்றவை விலகும்.