திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் நான்காம் நாள் காலை உற்சவத்தில், தங்க நாக வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார், வைர கையுடன் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.