Load Image
Advertisement

மிதுனம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்

செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் (ரிஷபம்) பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு (மிதுனம்) புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்களுக்கு குரு நட்பு கிரகம் என்றாலும் மே1 முதல் ஜென்ம குருவாக சஞ்சரிக்க இருக்கிறார். விரயம் கட்டுப்படும். வருமானம் பலவழியில் வரும். 3,4 ம் பாதத்தினருக்கு விரயகுருவாக செலவை அதிகரிப்பார். சோதனையை சாதனையாக மாற்றும் சக்தி உண்டாகும்.

பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள், 5, 7, 9 ம் இடங்களுக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். பதவி உயர்வு ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வருமானம் அதிகரிக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 4,6,8 ம் இடங்களுக்கு குருபார்வை ஏற்படுவதால் செலவு அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் கடன் வாங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களின் முயற்சி வெற்றியாகும்.

சனி சஞ்சாரம்: சனி 1,2 ம் பாதத்தினருக்கு 10ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேலைப்பளுவால் மனம் சோர்வடையும். 3,4ம் பாதத்தினருக்கு தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும்.

ராகு, கேது சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான ராகுவால் தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணம் பலவழிகளில் வரும். 3,4 ம் பாதத்தினருக்கு 10ம் இட ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். 4ம் இட கேதுவால் உடல்நலக்குறைவு தோன்றும்.

சூரிய சஞ்சாரம்: 1,2 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ.15, 2025, பிப்.13 - ஏப்.13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 - மே13, ஆக.17 - செப்.16, நவ.16 - டிச.15, 2025, மார்ச்15 - ஏப்.13 காலங்களிலும் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அரசுவழியில் ஆதாயம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார்.

பொதுப்பலன்: குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணவரவால் நெருக்கடி விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும்.

தொழில் : தொழிலில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் தொடங்கவோ, தொழிலை விரிவு செய்யவோ கடன் வாங்க வேண்டாம். பணியாளர்களை முடிந்தவரை அனுசரித்துச் செல்வதால் உற்பத்தி அதிகரிக்கும். வருமானம் உயரும்.

பணியாளர்கள்: உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பெண்கள்: உடல் பாதிப்பு விலகும். குடும்பம், பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
கல்வி: படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பு முயற்சியில் வெற்றி பெறும். விருப்பப்பட்ட கல்லுாரி, விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: வேலைப்பளு, ஓய்வின்மையால் உடல் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பரம்பரை நோய், தொற்று நோய், சுவாசப் பிரச்னை, பி.பி என ஏதாவது சங்கடம் தோன்றும் என்றாலும் அவற்றிலிருந்து சிகிச்சையால் விடுபடுவீர்கள்.
குடும்பம்: கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: நரசிம்மரை தினமும் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை: செலவு அதிகரிக்கும்

ராகுவை நட்சத்திராதிபதியாகவும், புதனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் துணிச்சல் மிக்கவராகவும், நினைப்பதை அடையும் சக்தி மிக்கவராகவும் இருப்பீர்கள். சப்தமாதிபதியும், ஜீவனாதிபதியுமான குரு மே 1 முதல் விரயகுருவாக சஞ்சரித்து செலவை அதிகரிப்பார். விலை உயர்ந்த பொருள் திருடு போக வாய்ப்புண்டு. ஏமாற்றுக்காரர்களின் பேச்சைக் கேட்டு பணத்தை இழக்க நேரலாம். கையிருப்பு கரையும். சோதனையை சாதனையாக மாற்றுவீர்கள்.

பார்வைகளின் பலன்: குருவின் பார்வை ராசிக்கு 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் கடன் பட்டாவது சொத்து வாங்குவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக மற்றவரிடம் கடன் வாங்கி சிக்கலுக்கு ஆளாக நேரும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

சனி சஞ்சாரம்: சனி 9ல் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வேலை, தொழிலில் பிரச்னை நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ராகு, கேது சஞ்சாரம்: 10ல் சஞ்சரிக்கும் ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வேலையை விடும் என்ற எண்ணம் உருவாகும். விருப்பமில்லாத இடமாற்றம் வரலாம். நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். 4ம் இட கேதுவால் உடல்நலம் குறையும்.
சூரிய சஞ்சாரம்: ஏப்.14 – மே 13, ஆக.17 – செப்.16, நவ.16 – டிச.15, 2025, மார்ச் 15 – ஏப்.13 காலங்களில் சூரியன் 3,6,10,11ம் இட சஞ்சாரத்தால் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல் பாதிப்பு குறையும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பை வழங்குவார். பணியாளர்கள் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் காண்பர். அரசுவழியில் ஆதாயம் வரும்.

பொதுப்பலன்: குருவின் பார்வைகளும், பாக்ய சனியும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். திட்டமிட்டு செயல்பட்டு பொருளாதார வளர்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் நெருக்கடி விலகும்.
தொழில்: புதிய முதலீடு, தொழிலுக்காக கடன் வாங்க வேண்டாம். தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. முடிந்தவரை பணியாளர்களை அனுசரித்தால் வருமானம் உயரும்.
பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி ஏற்படும். வேலைப்பளு கூடும். மறைமுகத் தொல்லை ஏற்படும். பதவி உயர்வு தள்ளிப் போகும். சலுகை பறி போகும் என்றாலும் அமைதி காப்பது நல்லது.
பெண்கள்: குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். உடல் பாதிப்பால் மருத்துவச் செலவு ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டாகும். பெரியோரின் ஆதரவால் நன்மை காண்பீர்கள். பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும்.

கல்வி: படிப்பு மீது அக்கறை இருக்கும். விரும்பிய கல்லுாரி, பாடப்பிரிவில் சேர்வதற்காக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
உடல்நிலை : உடல்நிலை ஒரு நேரம் போல மறுநேரம் இருக்காது. சிலர் இடுப்பு வலி, மூட்டுவலி, பரம்பரை நோய், தொற்று நோய், சுவாசப் பிரச்னை, பிரஷர், சுகர் என அவதிப்படுவீர்கள்.
குடும்பம்: கணவன், மனைவிக்குள் ஒற்றுமை கூடும் என்றாலும் குடும்ப விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த பணம் வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். பிள்ளைகள் முன்னேற்றம் காண்பர். அவர்களின் மேற்கல்வி எண்ணம் நிறைவேறும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: குருபகவானுக்கு முல்லைமலர் சாத்தி வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்

குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு (கடகம்) சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் விரயகுருவாக சஞ்சரித்து வீண்செலவை அதிகரிப்பார். அலைச்சல் அதிகரிக்கும். சுலபமாக முடிய வேண்டிய வேலைகளிலும் சிரத்தை எடுக்க வேண்டியதாக இருக்கும். 4ம் பாதத்தினருக்கு லாப குருவாக சஞ்சரித்து யோகத்தை தரப் போகிறார். நீங்கள் விரும்பிய நிலையை வழங்குவார்.

பார்வைகளின் பலன்: 1,2,3 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் வரவை விட செலவு அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக மற்றவரிடம் கடன் வாங்கி அதன் காரணமாக சிக்கலுக்கு ஆளாக நேரிடும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். 4ம் பாதத்தினருக்கு 3,5,7ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்தவர் ஒன்று சேர்வர்.

சனி சஞ்சாரம்: சனி 1,2,3 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். 4ம் பாதத்தினருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு கவுரவக் குறைச்சல் ஏற்படும்.

ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 10ம் இட ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். வேலையை விட்டு விடும் எண்ணம் உருவாகும். 4 ம் இட கேதுவால் உடல்நிலை ஒரு நேரம் போல் மறுநேரம் இருக்காது. 4ம் பாதத்தினருக்கு 3ம் இட கேதுவால் முன்னேற்றம் தோன்றும். உடல்நிலை சீராகும்.
சூரிய சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – மே 13, ஆக.17 – செப்.16, நவ.16 – டிச.15, 2025, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும், 4 பாதத்தினருக்கு ஏப்.14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச.16 - 2025, ஜன.13 காலங்களிலும் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தொழிலில் தடைகளை நீக்குவார். உடல்பாதிப்பை நீக்குவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பை வழங்குவார். பணியாளர்களுக்கு பதவி உயர்வு தருவார்.

பொதுப்பலன்: குருவின் சஞ்சார நிலை, பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் சங்கடங்களில் இருந்து விடுவிப்பர். நினைப்பதை நினைத்தபடி செய்து ஆதாயம் பெற வைப்பர். குடும்பத்தில் நெருக்கடி தீரும்.
தொழில்: தொழிலில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முதலீடு, கடன் வாங்குவது இக்காலத்தில் வேண்டாம். அதனால் சங்கடங்களே ஏற்படும். வழக்கமான செயல்களில் கவனம் செலுத்துங்கள்.
பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் உங்கள் திறமையை முதலாளி உணருவார். உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். ஆனால் விரும்பாத இடமாற்றம் ஏற்படும். சலுகை பறி போகும்.
பெண்கள்: குருவின் சஞ்சாரம், பார்வைகளால் உங்கள் நிலை உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பணியில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பொன், பொருள் சேரும்.
கல்வி: கல்வியின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வு முடிவுகள் உங்கள் கனவை நனவாக்கும். விரும்பிய கல்லுாரி, பாடப்பிரிவில் சேர்வீர்கள்.
உடல்நிலை : வாகனப் பயணத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடுப்புவலி, மூட்டுவலி, தொற்றுநோய், சுவாசப் பிரச்னை என ஏதாவது சங்கடம் தோன்றும். சிகிச்சையால் குணமடைவீர்கள்.
குடும்பம்: கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பிள்ளைகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்: சனிதோறும் சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement