சபரிமலை: சபரிமலையில் இன்று மாலை பெய்த மழையால், பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர். சபரிமலையில், மண்டல சீசன் துவங்கிய பின், அவ்வப்போது சாரல் மழை பெய்தது. ஆனால், இன்று மாலை, 6:30 முதல், இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. பக்தர்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் சிரமப்பட்டனர். மலையேறி, இறங்கும் பக்தர்கள் கவனமாக செல்லும் படி, தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது.