Load Image
Advertisement

ஏழுமலையானை இனி அருகில் சென்று தரிசிக்கலாம்!

திருப்பதி: திருமலை ஏழுமலையானை, தர்ம தரிசனத்தில் தரிசிக்க செல்லும் அனைவரும், இனி, அருகில் சென்று தரிசிக்கலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேர்தல் காரணமாக, திருமலையில், வி.ஐ.பி., டிக்கெட்டுகளில், எம்.பி., - எம்.எல்.ஏ., கோட்டாக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால், திருமலைக்கு வரும், வி.ஐ.பி.,க்களின் பரிந்துரை கடிதங்கள் குறைந்தன. தினமும் ஆயிரக்கணக்கில் ஏழுமலையானை தரிசித்து வந்த வி.ஐ.பி.,க்கள், தற்போது 300 பேராகக் குறைந்துள்ளனர். இதனால், காலை, 6:00 மணிக்கே, தர்ம தரிசனத்தை தேவஸ்தானம் துவங்குகிறது. இந்நிலையில், தினமும் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. அதனால், தேர்தல் முடியும் வரை, அனைத்து பக்தர்களுக்கும், அருகில் சென்று தரிசிக்கும், லகு தரிசனத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement