Load Image
Advertisement

திருப்பதியில் தெப்ப உற்சவம் துவக்கம்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் இன்று (12ம் தேதி) தொடங்கியது. 5 நாட்கள் விழா நடைபெறும். அதையொட்டி முதல் நாளான இன்று மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தொடர்ந்து 13–ம் தேதி ருக்மணி , ஸ்ரீகிருஷ்ணரும் சமேதரும், 14–ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியும் தெப்பத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். பின்னர் 15–ம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். கடைசி நாளான 16–ம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தெப்ப உற்சவத்தையொட்டி மேற்கண்ட நாட்களில் கோவிலில் வசந்த உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திருமலை– திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement