ஜ்வலன குடிலகேசம்
சூர்ய சந்த்ராக்னி நேத்ரம்
நிசிதஜர நகாகர
ஸ்யூத ஸிம்மாஸ்ய தேஹம்
சரபமத முனீந்த்ரை:
ஸ்தூயமானம் ஸிதாங்கம்
ப்ரணத பயவிநாசம்
பாவயேத் பக்ஷிராஜம்
ஹிரண்யவதம் புரிந்த நரசிம்மரின் ஆவேசம் அடங்க, சிவபிரான் மேற்கொண்ட கோலம் இது. வழியே இல்லை என்று தடுமாறும் சூழலிலும், உடன் நின்று காப்பாற்றுபவர், பறவை, விலங்கு, மனிதன் என்று ஒருங்கே அமைந்த இந்த அபூர்வ மூர்த்தி, பக்தர்களின் பயத்தை அறவே போக்கியருள்வார். சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ராகு கால வேளையில் தரிசித்து, தீபம் ஏற்றி வலம் வந்து வழிபடுவது நற்பலனைக்கூட்டும். சரபர் வழிபாடு அவ்வளவு சிறப்புடையது. இந்து துதியை தினமும் மூன்று முறை சொல்லி வந்தாலே பயம் அகலும்.