ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோகரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி ந்ருஸிம்மா
லட்சுமி நரசிம்ம பிரபோ! அச்சமூட்டும் உருவமும் சிங்கமுகமும் உடையவரே! கருணை மிகுந்தவரே! அபயம் நல்கும் கரத்தினை உடையவரே! உலகைக் காக்கும் பொருட்டு எங்கும் நிறைந்தவரே! எங்களது பாவங்களை களைந்து நலம் தருபவரே! எங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும். தினமும் ஒன்பது முறை அந்திப் பொழுதில் இந்தத் துதியைச் சொல்வது மிகச் சிறப்பானது.