Load Image
Advertisement

தில்லையின் பெருமை

மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோது
மான்மி யம்இணங் கும்தலம்
மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் திரமெலாம்
மன்றின் வடிவா கும்தலம்
முறையினா வின்குளப் படிநீரி னதிகோடி
முழ்கி முற்பவ மொழிதலம்
முதல்வர்சொற் படிநம்பி யடியனென் றுரைதில்லை
முனிவர் பூசனை புரிதலம்
குறைவிலவ் அந்தணர்கள் தினமும்அம ரர்க்கவி
கொடுத்து மகம்ஆற் றும்தலம்
கோபுரவி மானமதில் சூழவுயர் ஐந்துசபை
கொண்டெழி லுறுந்த லம்அதன்
திறமிவள வென்றுபல மறையொடயன் மாலாதி
சேடனும் உரைக்க எளிதோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement