Load Image
Advertisement

இறைவன் திருக்கோயில் கொண்டமை

கோடிமறை மாயன்விதி தேடரிய பிரமநீ
கூறுசுரர் முனிவ ராதிக்
கோதில்பல உயிரெலாம் பூசைமுறை புரியவும்
குலவும் ஐந்தொழில் பெருகவும்
நாடியசு யம்பாதி எழுவகை இலிங்கமென
நற்புவியின் அற்பு தமதாய்
நவிலுநிக மாகமம் அமைத்தெளிதின் அருளவே
நற்கோயில் கொண்ட னையதால்
நீடுசப ரியைசெய்து ருத்திரன் அழித்திடுவன்
நெடியமால் காவல் புரிவன்
நித்தம் படைப்பன்அயன் அகிலசுர ராதியர்தம்
நிலையில்இன்பு எய்தி வாழ்வார்
தேடிமறை காணாத நீடுசர ணாதீத
சின்மயா னந்த வாழ்வே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement