கோடிமறை மாயன்விதி தேடரிய பிரமநீ
கூறுசுரர் முனிவ ராதிக்
கோதில்பல உயிரெலாம் பூசைமுறை புரியவும்
குலவும் ஐந்தொழில் பெருகவும்
நாடியசு யம்பாதி எழுவகை இலிங்கமென
நற்புவியின் அற்பு தமதாய்
நவிலுநிக மாகமம் அமைத்தெளிதின் அருளவே
நற்கோயில் கொண்ட னையதால்
நீடுசப ரியைசெய்து ருத்திரன் அழித்திடுவன்
நெடியமால் காவல் புரிவன்
நித்தம் படைப்பன்அயன் அகிலசுர ராதியர்தம்
நிலையில்இன்பு எய்தி வாழ்வார்
தேடிமறை காணாத நீடுசர ணாதீத
சின்மயா னந்த வாழ்வே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.