Load Image
Advertisement

சிவலிங்க பூசை செய்தவர்கள்

பிரமன்அரி பதினோரு ருத்திரரொடு இந்திரன்
பெருந்திசைப் பாலர் உரகர்
பீடுகந் தருவர்கின் னரராதி கணநாதர்
பிணக்கிலா முனிவர் அமரர்
கருதுபல சமயவா னவர்கள்பல மறையரசர்
கயம்உரகம் இடபம் மந்தி
கயிலைமுதல் ஊர்ந்திடு பிபீலி காந்தத்துள்
கணக்கறு விலங்கி னொடுபுள்
அரசுகழு நாரைவலி யானனஞ் சரபமுதல்
அளிவிலாப் பறவை மற்றும்
அலகில்பல் லுயிருநின் னிலிங்கபூ சனைசெய்து
அடைந்தனர் போக மோட்சம்
திரிகரண சுத்தியொரு சிறிதுமில் லாதஇச்
சிதடனுக் கருள்பு ரிகுவாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செதீ சநட ராசனே.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement