Load Image
Advertisement

வளரொளிநாதர் - வடிவுடைஅம்மை!

காப்பு

கார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்
கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்
பார்மேவு வடிவுடையாள் பாங்கில் உள்ளோன்
பழமறைகள் பாதத்தில் தாங்கி உள்ளோன்
ஏர்மேவு தொழில் வளரப் பட்டிதோறும்
எழுந்தருளிக் காத்தருளும் எங்கள் ஐயன்
தார்மேவு வளரொளிசேர் நாத! எங்கள்
தமிழ்மேவு குலதெய்வம் நீயே காப்பாய்!
அம்பிகையே! வடிவுடையாய்! அம்மா! எங்கள்
ஆருயிர்க்குக் காப்பாகி அமைந்த தாயே!
செம்பாகம் பெற்றவளே! செகத்தா ரெல்லாம்
செயல்பாகம் கொண்டிலங்கச் செய்த தேவி!
அம்பாகப் பாயந்துருவும் தீமை எல்லாம்
அழித்தொதுக்கி நன்மை யெலாம் வளரச் செய்வாய்
தெம்பாக நீ இருந்து காக்க வேண்டும்
தேரிருந்த நாயகியே கடைக்கண் காப்பாய்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement