அன்றைய குருசாமிகள்!
60 ஆண்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. 60 முதல் 70 பேர் வரைதான் மகரவிளக்கு காலத்தில் சென்றுவந்தனர். அப்படி செல்லும்போது மிருகங்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கோடரி, ஈட்டி ஆகிய ஆயுதங்களை எடுத்துச் செல்வார்கள். அப்படியே சென்றாலும்கூட மிருகங்களிடம் சிக்கி பலரும் இறந்து விடுவதுண்டு. 15 பேர்தான் திரும்பி வருவர். அப்படி திரும்பி வருபவர்களை பக்தியுடன் குருசாமியாக கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. இப்போதும் ஐயப்ப சுவாமிகளுக்கு தலைமை ஏற்று செல்பவரை குருசாமி என்று அழைக்கிறார்கள்.