Load Image
Advertisement

உத்தராங்க பூஜை

உத்தராங்க பூஜை

தசா’ங்கம் குக்குலும் தூபம் ஸுகந்தம் ஸுமனோஹரம்/
தூபம் க்ருஹாண தேவேச’ விரூபாக்ஷ நமோஸ்து தே//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

தூபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயா/
தீபம் க்ருஹாண தேவேச’ த்ரைலோக்ய திமிராபஹம்//
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: தீபம் தர்சயாமி
(தீபத்தை காட்டவும்)

தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய
தீமஹி/தியோ யோ ந: ப்ரசோதயாத்/
(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ/
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி /(காலையில் பூஜை செய்தால்)
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி (மாலையில் பூஜை செய்தால்)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து / அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யாநயா ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

ஷட்ரஸைச்’ச ஸமோபேதம் நாநாபக்ஷ்ய ஸமன்விதம்
நைவேத்யம் துமயா தத்தம் க்ருஹாண பரமேச்’வர

ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: சா’ல்யன்னம், க்ருதகுள
பாயஸம், பலானி, ஏதத் ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமி

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி உத்தராபோசனம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நிவேதனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கர்ப்பூர பாடலைர் யுக்தம் ஏலோசீ’ர ஸமன்விதம்
சம்பகோத்பல ஸம்யுக்தம் பானீயம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கங்கா யமுனயோஸ் தோயை: சா’தகும்பகடைர் ஹ்ருதை:
ஹஸ்த ப்ரக்ஷாளனம் தேவ சு’த்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: ஹஸ்தப்ரக்ஷாளனம்
ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர குர்ணஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் தெளிக்கவும்)

நீராஜனம் மஹாதேவ கோடிஸூர்ய ப்ரகாச’க
பக்த்யாஹம் தே ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயானிதே
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம:
கர்ப்பூரநீராஜனம் தர்ச’யாமி (கற்பூரம் காட்டவும்)

யஸ்யாஜ்ஞயா ஜகத்ஸ்ரஷ்டா விரிஞ்ச: பாலகோ ஹரி:
ஸம்ஹர்ததா காலருத்ராக்ய: நமஸ்தஸ்மை பினாகினே
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

நானாரத்ன ஸமாயுக்தம் வஜ்ரநாள ஸமன்விதம்
முக்தாகேஸர ஸம்யுக்தம் ஸ்வர்ண புஷ்பம் ததாம்யஹம்
ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: ஸ்வர்ணபுஷ்பம்
ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: ச்சத்ர சாமராதி ஸமஸ்த
ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி வினச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

ஸோமேச்’வர விரூபாக்ஷ ஸோமரூப ஸதாசி’வ
ப்ரதக்ஷிணம் கரோமீச’ ப்ரஸீத பரமேச்’வர

நமஸ்தே ஸர்வலோகேச’ நமஸ்தே புண்யமூர்த்தயே
நமோ வேதாந்த வேத்யாய ச’ரண்யாய நமோ நம:

ஸ்ரீஸாம்ப பரமேச்’வராய நம: அனந்தகோடி ப்ரதக்ஷிண
நமஸ்காரான் ஸமர்ப்பயாமி.
(நமஸ்காரம் பண்ணவும்.)

(பஞ்சாக்ஷர ஜபம் செய்யவும்)

அர்க்ய ப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்தி படுத்தும் செயலாகும்)

அத்ய பூர்வோக்த, ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம்
சு’பதிதௌ, ஸோமவார புண்யகாலே ஸாம்பபரமேச்’வர
பூஜாந்தே அர்க்ய ப்ரதானம் உபாயனதானம் ச கரிஷ்யே//

ஸோமவாரே திவா ஸ்த்தித்வா நிராஹாரோ மஹேச்’வர/
நக்தம் போக்ஷ்யாமி தேவேச’ அர்ப்பயாமி ஸதாசி’வ//
ஸாம்பசி’வாய நம: இதமர்க்யம்,
இதமர்க்யம், இதமர்க்யம்.

நக்தே ச ஸோமவாரே ச ஸோமநாத ஜகத்பதே
அனந்தகோடி ஸௌபாக்யம் அக்ஷய்யம் குரு ச ’ங்கர
ஸாம்பசி’வாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

ஆகாச’தி திக்ச ’ரீராய க்ரஹ நக்ஷத்ர மாலினே
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ
ஸாம்பசி’வாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி
அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே
பார்வத்யை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்’வர
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ
ஸுப்ரஹ்மண்யாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

நந்திகேச’ மஹாபாக சி’வத்யான பராயண
சை’லாதயே நமஸ்துப்யம் க்ருஹ்ணீ தார்க்யமிதம் ப்ரபோ
நந்திகேச்’வராய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

அனேன அர்க்யப்ரதானேன பகவான் ஸர்வாத்மக:
ஸர்வம் ஸாம்பசி’வ: ப்ரீயதாம்
(என்று சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, பாலால் அர்க்யம் விடவும்.)

ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

யஸ்ய ஸ்ம்ருத்யா ச நமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு/
ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே ஸதாசி’வம்//

ஸோமவார வ்ரதம் பக்த்யா க்ருதம் கல்யாண தாயகம்/
ப்ரஸீத பார்வதீநாத ஸாயுஜ்யம் தேஹி மே ப்ரபோ//

ஸோமநாத ஜகத்வந்த்ய பக்தாநாமிஷ்டதாயக/
ஆயுஷ்யம் சைவ ஸௌபாக்யம் தேஹாந்தே
முக்திதோ பவ//
(ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்)

உபாயன தானம்

(பூஜை செய்வித்த சாஸ்திரிகளுக்கு அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

ஸாம்பசி’வ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்/
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்//

(ஆஸனத்தில் அமரச்செய்து, சந்தனம் கொடுத்து அக்ஷதை சேர்க்கவும்.)

ஸோமேச’: ப்ரதிக்ருஹ்ணாதி ஸோமேசோ’ வை ததாதி ச/
ஸோமேச’ஸ் தாரகோ த்வாப்யாம் ஸோமேசா’ய நமோ நம://

இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசி’வ பூஜா பல
ஸாத்குண்யம் காமய மான: ஸாம்ப பரமேச்’வர ஸ்வரூபாய
ப்ராஹ்ம ணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம//

(என்று சொல்லி அவருக்கு வெற்றிலை பாக்கு, பழங்கள் வைத்து தக்ஷிணையுடன் மேற்கண்ட ஸ்லோகம் சொல்லி தானம் கொடுக்க வேண்டும்.)

(தீர்த்தம் ப்ரஸாதம் பெற்றுக் கொள்ளவும்.)

புனர் பூஜை/ யதாஸ்தானம்

பூஜையெல்லாம் முடிந்த பிறகு சிறிது நேரம் கழித்து (நித்ய பூஜையாயின்) அல்லது மறுநாளோ (ஸாம்ப பரமேச்’வர பூஜையாகில்) புனர் பூஜை செய்து உத்யாபனம் செய்ய வேண்டும். சுருக்கமாக அஷ்டோத்தரம் ஜபித்து, முடிந்ததை நிவேதனம் செய்து கற்பூராதிகளை காட்டி, “ஸ்ரீஸாம்ப பரமேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று சொல்லி, வடக்காக நகர்த்தி வைக்கவும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement