ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்



ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கியது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை முன்னிட்டு 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சந்தனகாப்பு சாற்றபட்டு மலர் சட்டை மற்றும் மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் பட்டர்கள் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்