கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஜனவரி 13,2022



அன்னூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அன்னூர் கரிவரதராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியே வந்து அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதேசி நாளான நேற்று அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 3:30 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. 4:30 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதர கரிவரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் மற்றும் ராமானுஜர் சன்னதிகளில் எதிர் சேவை ஆற்றினார். இதைத்தொடர்ந்து திருவெம்பாவையின் 29ம் நாள் பாடல் பாடப்பட்டது. காலை 5:45 மணிக்கு பெருமாள் சொர்க்கவாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்து பெருமாள் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு விழாவில் பங்கேற்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்