கோவை ; ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் மூலவர் ஆண்டாளுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.