திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் இல்லங்களில் பரணி தீபம் ஏற்றுவது மரபு. வாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். ஐந்து முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம் தரிசிப்பது சிறப்பானது. இன்று மாலை 6.24 முதல் நாளை மாலை 4.47 வரை பரணி நட்சத்திரம் உள்ளது. இன்று வீட்டில் விளக்கேற்றி சிவ தரிசனம் செய்ய பாவங்கள் நீங்கும்!
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லங்களிலும், இறைவன் சன்னிதியிலும் மாலை விளக்கேற்றி வழிபட வேண்டும். இன்று வாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும். நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் இன்னும் சிறப்பு. மண் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளில், படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகனுக்கு இலுப்பெண்ணெயி லும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. நம் வீட்டு பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். இரண்டு முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். மூன்று முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். நான்கு முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். ஐந்து முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.