திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசி விழாவில் ஜீயர் பிரம்ம ரத்தத்தில் வீதி உலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் பஞ்ச சம்ஸ்காரம், பக்தர்களுக்கு சமாஸ்ரயணம் செய்து வைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் விஸ்வரூப தரிசனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகலீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருள, ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கைசிக புராணம் வாசித்தார். தொடர்ந்து 8:30 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து ஜீயர் மடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அட்சதை பிரசாதம் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.