|
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
அகத்தீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர் |
|
அம்மன்/தாயார் | : |
மங்கை நாயகி, பாகம்பிரியாள் |
|
தல விருட்சம் | : |
வன்னி, அகத்தி |
|
தீர்த்தம் | : |
அகத்திய தீர்த்தம் (கோயிலின் மேற்புறம் உள்ளது). அக்னிதீர்த்தம் (கடல்) அருகாமையில் உள்ளது. |
|
புராண பெயர் | : |
அகஸ்தியான்பள்ளி |
|
ஊர் | : |
அகஸ்தியன் பள்ளி |
|
மாவட்டம் | : |
நாகப்பட்டினம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
| | | | காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். | | | | |
![](//stat.dinamalar.com/new/temple/images/l.gif) |
முகவரி: | ![](//stat.dinamalar.com/new/temple/images/r.gif) | | | | |
அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில்
சேது ரஸ்தாசாலை,
அகஸ்தியம்பள்ளி அஞ்சல் - 614 810
(வழி) வேதாரண்யம்
வேதாரண்யம் வட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம். |
|
| | |
![](//stat.dinamalar.com/new/temple/images/l.gif) |
போன்: | ![](//stat.dinamalar.com/new/temple/images/r.gif) | | | | |
+91-4369 - 250 012 | |
| | | ![](//stat.dinamalar.com/new/temple/images/l.gif) |
பொது தகவல்: | ![](//stat.dinamalar.com/new/temple/images/r.gif) |
|
|
|
|
ராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது.
இராசராசன் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு உள்ளன.
சுவாமி சன்னதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது.
மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையின் பெயர்ப்பலகையும் அகஸ்தியர் கோயில் என்றே எழுதப்பட்டுள்ளது.
|
|
|
|
|
|
|
|
![](//stat.dinamalar.com/new/temple/images/l.gif) |
தல வரலாறு: | ![](//stat.dinamalar.com/new/temple/images/r.gif) |
|
|
|
|
கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் திரண்டிருந்தனர். இதனால் வடதிசையிலிருந்த கைலாயம் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த சிவபெருமான் அகத்தியரை அழைத்து, தென்திசைக்கு செல்லும்படி உத்தரவிட்டார்.
சிவனின் ஆணைப்படி அகத்தியர் தென்திசைக்கு சென்றார். செல்லும் வழிகளில் சிவலிங்கப் பிரதிஷ்டைசெய்து வழிபாடு நடத்தினார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் அகத்தியருக்கு சிவன் திருமணக்காட்சி தந்து அருளினார். இதனால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் ஆனார். அகத்தியர் திருவுருவம் கோவிலில் உள்ளது.
குலசேகரப்பாண்டியனுக்கு இருந்த வியாதிபோக்க இத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றதாக வரலாறு.
|
|
|
|
|
|
![](//stat.dinamalar.com/new/temple/images/l.gif) |
சிறப்பம்சம்: | ![](//stat.dinamalar.com/new/temple/images/r.gif) |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|