லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்டுமானத்துக்காக தனிப்பட்ட முறையில் 51 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக உத்தர பிரதேச ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி அறிவித்துள்ளார். கோவில் கட்டுமானத்துக்கு வக்பு வாரியம் உதவும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.