சூலுார்:சூலுார் அடுத்த போகம்பட்டி மற்றும் பொன்னாக்கானியில் உள்ள மாரியம்மன் கோவில்கள் பிரசித்தி பெற்றவை. இங்கு, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், பொங்கல் விழா நடப்பது வழக்கம்.விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள், பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், நுாற்றுக்கணக்கான ஆட்டு கிடாக்கள் வெட்டியும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.