பதிவு செய்த நாள்
15
நவ
2019
02:11
வீரபாண்டி: மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, திரளான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆட்டையாம்பட்டி அருகேவுள்ள, கண்டர்குலமாணிக்கம், மாரியம்மன் கோவிலில், ஐப்பசி திருவிழா, அக்னி கரக ஊர்வலம், குண்டம் இறங்குதலுடன், நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக, காப்பு கட்டி விரதமிருந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று காலை, பொங்கல் வைபவம் நடந்தது. அதில், திரளான பெண்கள், பொங்கல் வைத்து, தலைமுடியை காணிக்கையாக கொடுத்து, மாரியம்மனை வழிபட்டனர். மாலை, பூங்கரக ஊர்வலம் நடந்தது. இன்று மாலை கலை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி, இரவு வண்டி வேடிக்கை, நாளை மஞ்சள் நீராட்டுதலுடன், விழா நிறைவடையும். தங்க கவசம் இடைப்பாடி அருகே, குஞ்சாம் பாளையம், மாரியம்மன் கோவில் ஐப்பசி திருவிழா, கடந்த, 8ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதையொட்டி, தங்க கவச அலங்காரத்தில், நேற்று, மாரியம்மன் அருள்பாலித்தார்.