பதிவு செய்த நாள்
16
நவ
2019
11:11
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலைவிநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு அபி ஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, உற்சவ விநாயகர் ஊர்வலம் நடந்தது. எஸ்.வி.,ரோடு, கடைவீதி, மகாத்மாகாந்தி சாலை, வெளிபேட்டைதெரு, சுண்ணாம்புகாரவீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடிவிநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேரகணபதி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.