பதிவு செய்த நாள்
16
நவ
2019
11:11
சென்னை: பகவான் சத்ய சாய் பாபாவின், 94வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நவ., 17ம் தேதி, மயிலாப்பூரில் இருந்து சுந்தரம் வரை, ரத உற்சவம் நடக்கிறது. சத்ய சாய் சமதியின், சென்னை தலைமையகமான சுந்தரம், ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது.
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால், 37 ஆண்டுகளுக்கு முன், சுந்தரம் திறக்கப்பட்டது.இதன் சார்பில், ஆண்டு தோறும் பகவான் சத்ய சாய் பாபாவின் பிறந்த நாள் விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, பாபாவின், 94வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 17ம் தேதி, மயிலாப்பூரில் இருந்து ரத உற்சவம் நடத்தப்படுகிறது.அன்று மாலை, 4:15 மணி முதல், வேத விற்பன்னர்களால் வேதம் ஓதப்படுகிறது.மாலை, 5:00 மணிக்கு, செண்டை மேளம், பால விகாஷ் குழுவினர் பேண்டு வாத்தியம் முழங்க, வேத கோஷ்டியின், இளம் பஜனை கோஷ்டியினருடன், பகவான் சத்ய சாய் பாபாவின் ரதம், மயிலாப்பூர், லேடி சிவசாமி பள்ளியில் இருந்து புறப்படுகிறது. அங்கிருந்து, தெற்கு மாட வீதி, செயின்ட் மேரி சாலை சந்திப்பு, பில்ராத் மருத்துவமனை சந்திப்பு, கிரீன்வேஸ் சாலை வழியாக, சுந்தரத்தை ரதம் வந்தடைகிறது. இரவு, 7:00 மணிக்கு, சுந்தரத்தில் பூரண கும்ப மரியாதையுடன், பாபாவின் ரதம் வரவேற்கப்படுகிறது. பின், மங்கள ஆராத்தி நடக்கிறது.