Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகைக்கு தயாராகும் பேன்சி ரக ... தீபம் ஏற்ற வந்தாச்சு அகல் விளக்குகள் தீபம் ஏற்ற வந்தாச்சு அகல் விளக்குகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி மரங்களுக்கு கல்யாணம்: வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
மழை வேண்டி மரங்களுக்கு கல்யாணம்: வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

16 நவ
2019
12:11

சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் மழை வேண்டி மரங்களுக்கு கல்யாணம் செய்து வைத்து கிராமத்தினர் வினோத வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது கம்பிளியம்பட்டி கிராமம். இப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. விவசாயம் பாதித்ததோடு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டது. மரங்களுக்கு திருமண சடங்கு: இந்நிலையில் மழை வேண்டியும் தொற்று நோயிலிருந்து மக்களை காக்கவும் மரங்களுக்கு திருமண சடங்கு நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து காளியம்மன் கோயில் பகுதியில் அருகருகே இருந்த அரசு மற்றும் வேப்ப மரங்களை கழுவி சுத்தம் செய்தனர்.

ஆணாக பாவித்த அரச மரத்திற்கு பட்டு வேட்டியும், பெண்ணாக பாவித்த வேப்ப மரத்திற்கு புடவையும் கட்டப்பட்டது. இதையடுத்து வேதமந்திரங்கள் முழங்க வேப்ப மரத்திற்கு தாலி கட்டி கல்யாண சடங்கு செய்யப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளானோர் இந்த வினோத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பழங்காலத்தில் கடும் வறட்சி நிலவும் சமயத்தில், இங்கு இது போன்ற சடங்குகள் செய்வது வழக்கமாக இருந்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar