பதிவு செய்த நாள்
16
நவ
2019
12:11
சிவகாசி: ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையும் கண்டிப்பாக இருக்கும். இங்கு அவரவர் இஷ்ட தெய்வங்களின் படங்களை வைத்து வழிபடுவர். இதில் சூடம், பத்தி, மாலை முக்கிய பங்கு வகிக்கும். அதே போல் குத்து விளக்கு, அகல் விளக்குகள் தவறாமல் இடம் பெறும். இவற்றில் எண்ணெய், நெய் ஊற்றி தீபம் ஏற்றுவர். கார்த்திகை மாதத்தில் அனைத்து வீடுக ளிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வீட்டை அலங்கரிப்பர்.
அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடுவது தனி அழகு. அகல் விளக்குகள் மண்ணால் செய்யப் பட்டிருக்கும். இவ்விளக்குகள் தற்போது பல்வேறு வடிவங்களில் வந்து விட்டது. மண் தவிர பீங்கான் அகல் விளக்குகளும் அதிகளவில் உள்ளன.
சிவகாசி சிவன் கோயில் பின்புறம் உள்ள விஷ்ணுபிரியா மண்பானை கடையில் அகல் விளக்குகள் வித விதமாக விற்பனைக்கு வந்து உள்ளன.
பீங்கான் விநாயகர் விளக்கு, லட்சுமி விளக்கு, யானை விளக்கு, சங்கு விளக்கு, லிங்க விளக் கு, சுழல் விளக்கு, பாவை விளக்கு என பல்வேறு சுவாமிகளின் உருவங்களில் விளக்குகள் சிறியதும் பெரியதுமாக விற்பனைக்கு உள்ளது.
பழமை மாறாத மக்கள் இன்றளவும் அகல் விளக்குகளில்தான் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். மண் விளக்குகள் ரூ. 1லிருந்து ரூ. 40 வரையிலும், பீங்கான் விளக்குகள் ரூ. 3 லிருந்து ரூ. 250 வரையிலும் உள்ளது.
இதன் உரிமையாளர் கருப்பசாமி, “3 ஆண்டுகளாக இத்தொழில் செய்து வருகிறேன். பூஜை அறையில் வழிபடுவதற்காக பல்வேறு வடிவங்களில் சுவாமிகளின் உருவங்களில் விளக்கு களை நாங்களே தயாரிக்கிறோம். பீங்கான் விளக்குகளை விருத்தாசலத்தில் வாங்கி விற் பனை செய்கிறோம்,” என்றார். தொடர்புக்கு 97865 92737.