பதிவு செய்த நாள்
16
நவ
2019
01:11
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடர்பாக, முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பெரியநாயகர் சன்னதியில் நடந்த கூட்டத் திற்கு, விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமை தாங்கினார்.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த், முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் முன்னிலை வகித்தனர்.
செயல் அலுவலர் முத்துராஜா வரவேற்றார்.செயல் அலுவலர்கள் திருவக்கரை நாகராஜன், மாரிமுத்து, ஆய்வாளர் லட்சுமி நாராயணன் உட்பட முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி களின் பிரமுகர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகளை விரைவாக நடத்தவும், சித்திரை கடைசி அல்லது வைகாசி முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும், சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, முக்கிய பிரமுகர்களிடம் ஆலோசனை பெற, அனைத்துக் கட்சி பிரமுகர்கள், பொது மக்களிடம் முன்கூட்டியே தெரிவித்து, ஆலோசனை கூட்டம் நடத்த தீர்மானிக்கப் பட்டது.முன்னதாக, ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ் வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.