சிங்கம்புணரி:சிங்கம்புணரி முழுவீரன் தெரு பாலவிநாயகர் கோயிலில் பாலமுருகன், தட்சணா மூர்த்தி, துர்க்கை அம்மன், லிங்கோத்பவர், நவகிரகங்கள் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 14ம் தேதி காலை 9:00 மணிக்கு முதல் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று (நவம்., 15ல்) காலை 2ம் கால வேள்வி பூஜை,கோமாதா பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்று யாகம் நிறைவடைந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. காலை 10:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை சுமந்து சென்று மூலவர் சன்னதி கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.