பதிவு செய்த நாள்
16
நவ
2019
01:11
சேலையூர்: சேலையூரில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் மற்றும் மூல மிர்த்திகா பிருந்தாவன பிரதிஷ்டை, நாளை நடக்கிறது. தாம்பரம் அடுத்த சேலையூர், மகாதேவன் நகரில், ஐந்து ஆண்டுகளாக, ராகவேந்திர சுவாமி மந்த்ராலயம் கட்டப்பட்டு வந்தது. அது நிறைவு பெற்றுள்ள நிலையில், கும்பாபிஷேகம் மற்றும் மூல மிர்த்திகா பிருந்தாவன பிரதிஷ்டை நாளை நடக்கிறது.கும்பாபிஷேகத்தை, நஞ்சங்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி, சுப தீர்ந்திர தீர்த்த சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை வளர்க்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று காலை, 6:00 மணிக்கு ஹோமம் நடக்கிறது.மாலை, மங்கள இசை மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு, சுவாமிகள் அருளுரை மற்றும் அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேக நாளான நாளை காலை, பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு கலசங்களுக்கு கும்பநீர் சேர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, புதிய மடத்தின் ஸ்தாபகரான, முன்னாள் தாம்பரம் நகராட்சி தலைவர் கரிகாலன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.