குமாரபாளையத்தில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2019 01:11
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சித்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபி ஷேக விழா நடந்தது. குமாரபாளையம், சுந்தரம் நகர் சித்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 3ல் துவங்கியது. நேற்று (நவம்., 15ல்) காலை, 9:00க்கு கும்பாபி ஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
பவானி காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் பிரபாகர ஈசான சிவம் குழுவினர் யாக சாலை பூஜை, கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.