Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளகோவிலில் அம்மையப்பர் ... இன்று கார்த்திகை முதல் சோமவாரம்: சிவாலயங்களில் சங்காபிஷேகம் இன்று கார்த்திகை முதல் சோமவாரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுருளியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்: விரதம் துவங்கினர்
எழுத்தின் அளவு:
சுருளியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்: விரதம் துவங்கினர்

பதிவு செய்த நாள்

18 நவ
2019
10:11

கம்பம் : சுருளியில் நேற்று அதிகாலை முதல் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளித்து மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

கார்த்திகை முதல் தேதியான நேற்று காலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் சுருளி அருவியில் குவிந்த இருந்தனர். ஐயப்ப பக்தர்கள் குளித்து மாலை அணிய அருவிப் பகுதிக்கு வனத்துறை அனுமதி வழங்கியது.அருவிக்கு வந்த பக்தர்கள் குளித்து, குருசாமிகள் கைகளால் துளசிமாலை அணிந்து கொண்டனர். இந்தாண்டு ஏராளமானவர்கள்புதிதாக மாலை போட வந்திருந்தனர். பின் பூதநாராயணர், வேலப்பர், கோடிலிங்கம்,ஆதி்அண்ணாமலையார், ஐயப்பன் கோயில்களில் சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக இங்குள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து சுவாமி விக்ரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அருவியில் ஆராட்டு நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். கோயில் டிரஸ்டி பொன்காட்சிகண்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.கம்பம், காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, கூடலுார், புதுப்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட ஏராளமான ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்திருந்தனர். கம்பம் குருசாமி நாராயணன், இந்தாண்டுமாலை போட வந்த பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. ஆண்டிற்கு ஆண்டு பக்தர்கள் வருகை அதிகரித்து வருவது ஐயன் செயலாகும் என்றார்.

பெரியகுளம்: பெரியகுளம் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல்நாளான நேற்று வராகநதியில் குளித்து விட்டு, ஐஸ்வர்யம் விநாயகர் கோயில் முன்பு ஏராளமானோர் மாலை அணிவிக்கும் கன்னிச்சாமிகள் உட்பட 350 பேருக்கு, குருசாமி ஜோதிசாமி சரண கோஷத்துடன் மாலை அணிவித்தார். இவர்கள் 48 நாள் மண்டல பூஜையும், சிலர் மகரஜோதிக்கும் சபரிமலை செல்கின்றனர். ஜோதிசாமி,ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை காண்பதற்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar