திண்டுக்கல்: கார்த்திகை பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கினர். கார்த்திகை பிறப்பை முன்னிட்டு, திண்டுக் கல் மலைஅடிவாரம் ஐயப்பன் கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.
கணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் குருசாமியிடம் ஆசிபெற்று சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்தனர். இதை போல் நாகல்நகர் ஐயப்பன் கோயில், வெள்ளை விநாயகர் கோயிலில் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை துவங்கினர்.