பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், உலக நன்மை வேண்டி வராகி அம்ம னுக்கு சிறப்பு பஞ்சமி யாகம் நேற்று முன்தினம் (நவம்., 16ல்) நடந்தது.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று (நவம்., 17ல்) தேய்பிறை பஞ்சமி தினத்தன்று உலக நன்மை வேண்டி, வராகி அம்மனுக்கு சிறப்பு மகா பஞ்சமி யாகம் மாலை 5:00 மணியளவில் நுாறு கால் மண்டபத்தில் நடந்தது.மாலை 6:30 மணிக்கு கலசநீரால் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.