பதிவு செய்த நாள்
18
நவ
2019
03:11
விழுப்புரம்: கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி, விழுப்புரம் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில், நேற்று 17ல் காலை 6.00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, 6.30 மணிக்கு, குருசாமி குப்புசாமி, அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், முத்துமாரியம்மன் கோவில், மருதுார் மாரியம்மன் கோவில், ரயிலடி விநாயகர் கோவில், ரங்கநாதன் சாலை சக்தி விநாயகர், காமராஜர் வீதி அமராவதி விநாயகர், பெருமாள் கோவில் வீதியில் உள்ள கோட்டை விநாயகர், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் களில் உள்ள அய்யப்ப சுவாமி கோவில்களில் பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது.