ஸ்ரீரங்கம்: அரங்கநாதசுவாமி கோயிலின் உபகோயிலான காட்டழகிய சிங்கர் கோயிலின் " மஹாசம்ரோசணம்" வருகிற 01.12.19 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று சஷ்டி திதி பூச நட்சத்திரத்தில் சித்தயோகம் கூடிய சுப தினத்தில் காலை 9 .15- 10.00 மணிக்குள் "பாலா லையம்" நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.