விருதுநகர்:- விருதுநகரில் சொக்கநாத சுவாமி கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேகம் நடந்தது. கோயில் வளாகத்தில் 1008 சங்கு களில் புனித நீர் நிரப்பப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து மூலவ ருக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.