புதுச்சேரி : லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், சிவகால ஞான பைரவருக்கு ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்தது. லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிவகால ஞான பைவரருக்கு, பைரவ ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. நேற்று காலை ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் லட்சார்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.